Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சரும் அகதிகளை அவமதிப்பவருமான மொரிசன் யாழ்ப்பாணத்தில்

Scott_Morrison (1)அகதிகள் விவகாரத்தில் மனித விழுமியங்களை மதிக்காத சர்வாதிகாரி போன்று செயற்படும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை சென்றுள்ளார். யாழ்ப்பாணம் சென்ற அவர் வடமாகாண ஆளுனரை மட்டும் சந்தித்தார். பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன் யாழ்ப்பாணம் சென்று திரும்பிய பின்னர் அங்கு பயணம்செய்யும் இரண்டாவது முக்கிய மேலை நாட்டுப் பிரதானி ஸ்கொட் மொரிசன்.

அதேவேளை வட மாகாண ஆளுநருடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஸ்கொட் மொரிஸன்- புதிதாக அமைக்கப்பட்டுள்ள வட மாகாண அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். வட மாகாண சபை தொடர்ந்து தங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் ஏனையவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.யாழ்ப்பாணத்திற்கு இரண்டாவது தடவை விஜயம் செய்வதாகவும் மாற்றங்களை அவதானிக்க முடிவதாகவும் அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லை நிர்ணய அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்தார்.

Exit mobile version