Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அயோத்தியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது:தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமாம்

india-ayothiyaஅயோத்தி, வாரணாசி, மதுரா ஆகிய நகரங்களில் உள்ள மத வழிபாட்டு தலங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த கூடும் என்ற இந்திய மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததாகவும் இதனையடுத்து அப்பகுதிகளிலுள்ள வழிபாட்டுத் தலங்களுக்குப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. அயோத்தியில் இசுலாமிய வழிபாட்டுத் தலத்தையே இடித்துத் தரைமட்டமாக்கிய தீவிரவாதிகள் ஆட்சியதிகாரத்திலிருக்கும் இந்தியாவில் கோவில்களுக்குப் பாதுகாப்பு என்பது அரச பயங்கராவதத்திற்கான முன்னறிவிப்பா என்ற சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.

மத்திய உள்துறை செயலர் அனில் கோஸ்சுவாமி தலைமையில், டெல்லியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மத்திய ரிசர்வ் போலீஸ் படை டி.ஜி.பி., திலீப் திரிவேதி, உத்தர பிரதேச மாநில டி.ஜி.பி., பானர்ஜி, அம்மாநில உள்துறை முதன்மை செயலர் தீபக் சிங் சிங்கால் உட்பட பலர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் தான், மூன்று நகரங்களின் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. பாதுகாப்புத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டுக்கு மோடியின் அரசு அனுமதியளித்துவிட்டு கோவில்களில் பாதுகாப்பை அதிகரிப்பதும் வன்முறையைத் தூண்டுவதும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் தந்திரோபாயம். பிரபலமான மதவழிபாட்டுத் தலங்கள் உள்ள இந்த மூன்று நகரங்களிலும், அதிக கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் நவீன மின்னணு சாதனங்களை பொருத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், மூன்று நகரங்களிலும் உள்ள வழிபாட்டுத் தலங்களில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கூடுதல் பிரிவுகளை பணியில் ஈடுபடுத்துவது என்றும், 24 மணி நேரமும், பாதுகாப்புப் படையினர் ஈடுபாட்டோடுபணியாற்றுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

Exit mobile version