20.08.2008.
அமெரிக்கா திட்டமிட்டுள்ள பாதுகாப்பு ஏவுகணைகளில் ஒரு தொகுதியை, போலந்து நாட்டில் நிலைநிறுத்துவது பற்றிய உடன்படிக்கை, ரஷ்யாவின் பலத்த எதிர்ப்பையையும் மீறி போலந்தின் தலைநகரான வார்சாவில் கையொப்பமாகியுள்ளது.
நேட்டோ அமைப்பும் போலந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் அச்சுறுத்தல்களை சமாளித்து, பதில் நடவடிக்கை எடுக்க இந்த உடன்படிக்கை உதவும் என்று அமெரிக்காவின் இராஜாங்க அமைச்சர் காண்டலீசா ரைஸ் வார்சாவில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
போலந்து தனது கேந்திர முக்கியத்துவம் மிக்க இலட்சியங்களை அடைந்துவிட்டது என்று அந்நாட்டின் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஏவுகணைகளை தமது மண்ணில் நிலைநிறுத்தி வைக்க போலந்து இணங்கியதன் மூலம், தானே தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்தையும் எதிர்நோக்குகிறது என்று ரஷ்யா போலந்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது