Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமரிக்க தேவாலயத்தில் குரானை எரித்த கிறீஸ்தவ அடிப்படைவாதிகள்

இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற கற்பனையை வளர்த்து உலகெங்கும் ஆயிரக்கணக்கான மனிதர்களைக் கொன்று குவித்த அமரிக்காவின் இதயப் பகுதியிலேயே கிறிஸ்தவ அடிப்படை வாதிகள் குர் ஆனை எரித்துள்ளனர். அமரிக்கா நிகழ்த்திய இஸ்லாமியப் படுகொலைகளின் சின்னமாக இந்த நிகழ்வு அமைகிறது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிக்கப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குரான் நூல் குற்றங்களின் தொகுப்பாக உள்ளதாக கூறி அதனை நேற்று எரித்துள்ளதாக அந்த தேவாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய கிறிஸ்தவ மதபோதகர் டெர்ரி ஜோன்ஸ் மேற்பார்வையில், தேவாலய பாஸ்டர் வேன் ஸாப் என்பவரால் குரான் கொளுத்தப்பட்டுள்ளது.

டெர்ரி ஜோன்ஸ் ஏற்கனவே கடந்த ஆண்டு, செப்டம்பர் 11 ஆம் தேதியன்று, தீவிரவாதிகள் 2001 ஆம் ஆண்டு நடத்திய இரட்டைக் கோபுர தாக்குதல் நினைவு தினத்தன்று குரானை எரிக்கப் போவதாக கூறி பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version