Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

‘அதாவுல்லா’ காக்கா மறைந்தார்…? : கவிஞர் பொத்துவில் அஸ்மின்

athaulla

‘அதாவுல்லா’ காக்கா மறைந்தார்….
——————————————————-

எரியுது எங்கள் தேசம்
நாங்கள் உழைத்தது அனைத்தும் நாசம்
அரசியல் வாதிகள் கோசம் 
அரைநொடியிலே கலைந்திடும் வேசம்

மீனுக்கு தலையினை காட்டி-தினம்
பாம்புக்கு வாலினை ஆட்டி
கொடுக்கிறார் அரசுக்குக்கூட்டி
அதை சொல்லுது ‘அஸ்வரின்’ பேட்டி

‘அதாவுல்லா’ காக்கா மறைந்தார்-நாம்
அழிந்தபின் அலுத்கம விரைந்தார்
பாராளுமன்றத்தில் கொதித்தார்-பின்
பகைவனின் சேலைக்குள் ஒளித்தார்.

‘ரிஸாத்தின்று’ நடிக்கின்ற நடிப்பு-அட
சிவாஜியும் தோற்கிற நடிப்பு
‘அரசுக்கு தூக்குறார் செருப்பு’-அதை
நினைக்கையில் வருகுது சிரிப்பு…!

மாமி செருப்பால அடிச்சும்
மாமா ‘ரவுசர’ உரிஞ்சும்
மருமகன் தலைவர் ‘ஹக்கீம்’-அவ
மகள்ட மடியிலே படுக்கார்.

கழுதைகள் எம்மை நெருக்க
எம் கடைகளை அடித்து நொறுக்க
உலகமே அதனை வெறுக்க-இன்னும்
உலக்கைகள் அரசிலே இருக்க….

‘வட்டரக்க விஜித தேரர்’
‘பாலித தேவர பெரும-உங்க
சிறுநீர் கொஞ்சம் கொடுங்க-எங்க
சிரங்குகள் வாயில் பருக்க..

 
-கவிஞர் பொத்துவில் அஸ்மின்

Exit mobile version