Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இழஞ்செழியனை நோக்கிய துப்பாக்கியின் பின்னால் விஜகலா மகேஸ்வரன்?

இலங்கை இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களை மீட்பதற்கு முயற்சிசெய்யும் காணொளியும் ஏனைய ஆதாரங்களும் பல்வேறு கேள்விகளை உருவாக்கியுள்ளன. விஜயகலா மகேஸ்வரனுக்கு பெருந்தொகைப் பணம் சுவிஸ் குமார் உட்பட்ட சந்தேக நபர்கள் ஊடாகப் பரிமாறப்பட்டிருக்கக்கூடிய வாய்ப்புக்கள் நிராகரிப்பதற்கு இல்லை.

தவிர நீதிபதி இளஞ்செழியன் மீதான மெய்ப்பாதுகாவலர் மீதான துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னணி தொடர்பான சந்தேகங்களும் எழுந்துள்ளன. சந்தேக நபர்களைக் காப்பாற்ற முற்பட்ட போலிஸ் அதிகாரிக்கும் விஜயகலாவிற்கும் இடையேயான உரையாடல்கள் என்பன முழுமையாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய சூழல் எழுந்துள்ளது.

இவ் வழக்கை விசாரணைக்கு உட்படுத்தும் நிலையிலேயே இழஞ்செழியன் மீதான துப்பாக்கிப் பிரயோகம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் கொலை முயற்சியெனத் தெரிவிக்கப்பட்ட போதும், பின்னதாக குடி போதையிலிருந்த இருவரின் தற்செயலான செயற்பாடே துப்பாக்கிச் சூடு என அறிக்கப்பட்டது.

ஆக, இழஞ்செழியனை மிரட்ட அல்லது கொலைசெய்யவே இத் துப்பாக்கிச் சூட்டை விஜயகலா பின்னணியிலிருந்து இயக்கியிருக்கலாம் என்ற சந்தேகங்கள் பரவலாக எழுகின்ற போதும் அவை உறுதிப்படுத்தப்படவில்ல.

போரின் அனுபவங்களும், கற்றலும் புதிய அறிவியல் சமூகம் ஒன்றையும், புதிய போராட்ட வழிமுறைகளையும் ஏற்படுத்துவதற்குப் பதிலாக ஊழலும், வன்மமும் நிறைந்த சமூகச் சூழல் தோன்றியுள்ளது. புலம்பெயர் நாடுகளிலிருந்து திணிக்கப்படும் பிந்தங்கிய அரசியல் சிந்தனையும், வாக்கு வங்கியை முன்வைத்து நடத்தப்படும் அரசியலும், பேரினவாத ஒடுக்குமுறையும், பொருளாதாரச் சுமையும் நிறைந்த ஒரு சமூகத்தின் அவலங்களைப் பயன்படுத்திக்கொள்ள விஜயகலா மட்டுமல்ல, இன்றைய ஒவ்வொரு அரசியல் தலைமைகளும் இடைவிடாது செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன.

Exit mobile version