Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வடக்கில் வாக்குச் சேர்க்கும் கட்சிகளின் வறுமை!

மக்கள் கூட்டத்தைக் கண்டால் அவர்களை வாக்குகளாக மாற்றுவது எவ்வாறு என்பதை மட்டுமே சிந்திக்கும் வாக்குப் பொறுக்கும் கட்சிகள் உலகம் முழுவதும் சமூகத்திலிருந்து அன்னியப்படுத்தப்படுகின்றன. மக்கள் புதிய வழிகளைத் தேடிக்கொள்கிறார்கள். நாற்பது ஆண்டுகால் போராட்ட வரலாற்றின் எச்சங்களைக்கூட அழிப்பதற்கான நிகழ்ழ்சி நிரலில் வாக்குக் கட்சிகள் செயற்படுவதை மக்கள் நிச்சயமாக இனம்கண்டுகொள்வார்கள்.

வன்னி இனப்படுகொலையின் பின்னர் பருந்துகள் போல மக்களைச் சூறையாடும் வாக்குக் கட்சிகளில் பிரதான கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு/தமிழரசுக் கட்சி இலங்கைப் பேரினவாத அரசின் ஊதுகுழலாக வெளிப்படையாகவே செயற்படும் நிலையில் விரக்தியடைந்த மக்களை உள்வாங்கிக்கொள்ள ஏனைய கட்சிகள் முயற்சிகின்றன. யாழ் மையாவாதத்தின் நேரடி முகவர்களான தமிழரசுக் கட்சியின் அழிவிலிருந்தே மக்கள் சார்ந்த கட்சிகள் தோற்றம்பெறுவது சாத்தியமானது. அந்த அழிவின் வெற்றிடத்தை வாக்குக் கடசிகள் நிரப்பிவிட முடியாது,

வாக்குச் சேர்ப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ள அரசியல் கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புலம்பெயர் நாடுகளிலிருந்து தமிழர்களைப் பிடித்துவந்து வடக்கை அபிவிருத்தி செய்யப்போவதாகவும் அதற்காக உள்ளூராட்சித் தேர்தலில் தம்மை வெற்றிபெறச் செய்யுமாறும் கோருகின்றனர்.

சீ.வீ.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் வட மாகாண சபை இலங்கை அரசின் ஒதுக்கீட்டில் கிடைத்த மில்லியன்களை பயன்படுத்தாமல் திருப்பியனுப்பிய வேளைகளில் மூச்சுக்கூட விடாத ‘அகில இலங்கைத்’ தமிழ் காங்கிரஸ்/தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இன்று தேர்தல் அண்மிக்கும் நேரத்தில் புலம்பெயர் நாடுகளிலிருந்து அழைத்து வருவதாகக் கூறுவது வேடிக்கையானது.

போரின் வடுகளிலிருந்து மீண்டுவரும் மக்களின் வாழ்வாதாரத்தை புலம்பெயர் வியாபாரிகளிடம் ஒப்படைபதைக் கூடத் தேர்தல் பிரச்சாரமாக முன்வைக்கும் அளவிற்கு அரசியலின் வறுமை தாழ்ந்துவிட்டது.

Exit mobile version