Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மறவன்புலவில் மாட்டிறைச்சி உண்போம்!

இந்தியா எங்கும் மதவெறியைத் தூண்டி அழிவுகளை ஏற்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சிவசேனா போன்றவற்றின் இலங்கை முகவராகச் செயற்படும் மறவன்புலவு சச்சிதானந்தம் முஸ்லீம்களை இலங்கையை விட்டு வெளியேறுங்கள் எனவும் மாட்டிறைச்சி உண்ணக்கூடாது என்று தெரிவித்த கருத்துக்கள் பல ஊடகங்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

மாட்டிறைச்சிக் கடைகளை நேற்றுவந்த இஸ்லாமியர்களே இலங்கையில் திறந்தார்கள் என்றும் இலங்கை இந்து அல்லது பௌத்த நாடு என்றும் கூறும் மதவாதத்தை வைத்து வயிற்றுப்பிழைப்பு நடத்தும் மறவன்புலவு சச்சிதாந்தம் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தும் பேரினவாத அடியாள் என்பதோடு மட்டும் நிறுத்திவிட முடியாது.

பொதுபல சேனா அமைப்புடனான இவர்களின் உறவும், பௌத்த அடிப்படிவாதத்தை நியாயப்படுத்தும் போக்கும் பல அழிவுகளை ஏற்படுத்தவல்லது. ஆர்.எஸ்.எஸ்., நாம் தமிழர் போன்ற அடிப்படைவாத அரசியல் கட்சிகள் நமது மண்ணின் வரலாற்றுப் பாரம்பரியத்திற்கு அப்பால்பட்டது.

பொதுபல சேனா அமைப்புடனான இவர்களின் உறவும், பௌத்த அடிப்படிவாதத்தை நியாயப்படுத்தும் போக்கும் பல அழிவுகளை ஏற்படுத்தவல்லது. ஆர்.எஸ்.எஸ்., நாம் தமிழர் போன்ற அடிப்படைவாத அரசியல் கட்சிகள் நமது மண்ணின் வரலாற்றுப் பாரம்பரியத்திற்கு அப்பால்பட்டது.

மறவன்புலவு சச்சிதானந்தின் மதவெறிப் பேச்சைத் தொடர்ந்து நாவலர் வீதி முஸ்லீம் தெருவில் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருந்த உணவு விடுதியொன்றை மூடுமாறு முஸ்லிம்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து அது இடை நிறுத்தப்பட்டது.

2020 இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கான கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பமாகியுள்ள நிலையில் பௌத்த சிங்கள வாக்குகளோடு இந்துத்துவ வாக்குகளையும் இணைப்பதற்கான திட்டம் ஆரம்பமாகிவிட்டதா என்ற சந்தேகங்கள் எழுகின்றன.

மதவெறிப் பேச்சு:

Exit mobile version