Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஒடுக்குமுறையை மீறி மாணவர்கள் தொடர்ந்து போராட அழைப்பு!

மெரினா கரையில் போராடிக் கொண்டிருந்த மாணவர்களை தமிழக போலீசார் வலுக்கட்டாயமாக கலைத்திருக்கின்றனர். இருப்பினும் போலீசாரின் ஒடுக்குமுறையை மீறி மாணவர்கள் கடலுக்குள் சென்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். மெரினா ராஜிவ் காந்தி சாலையில் 1000 போலீசார் குவிக்கப்பட்டு அந்த பகுதி முற்றிலும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இந்நிலையை மீறி பட்டினப்பாக்கம் கடல் வழியாக மாணவகளை காக்க மக்கள் நூற்றுக்கணக்கில் சென்று கொண்டிருக்கின்றனர். எனவே இச்செய்தியை பார்க்கும் சென்னை மக்கள் எவ்வளவு நபர்களை திரட்ட முடியுமோ திரட்டிக்கொண்டு மெரினாவுக்கு விரைந்து வாருங்கள்.

தமிழகத்தின் இதர பகுதிகளிலும் இதே போன்று வன்முறையாக கலைப்பாதாக செய்திகள் வருகின்றன. கோவை, மதுரையிலும் போலிசார் இதே போன்று வன்முறையை அரங்கேற்றி மாணவர்களை கலைத்தனர். அதை மீறி அங்கேயும் மக்களும் மாணவர்களும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.  அங்கேயும் இதே போன்று திரண்டால் மாணவர் போராட்டத்தை காக்க முடியும்.

வேடிக்கை பார்க்கும் தமிழகமே வீதிக்கு விரைந்து வா!

-வினவு

இது தொடர்பாக மக்கள் அதிகாரம் வெளியிட்டுள்ள போராட்ட முழக்கம்

  • இனி இது ஜல்லிக்கட்டு மட்டுல்ல – டில்லிக்கட்டு!
  • மோடி பன்னீர் கூட்டு சதி!
  • தமிழக மக்கள் மீது மோடி அரசின் பயங்கரவாத தாக்குதல்!
  • டில்லிக்கு தமிழகம் அடிமையல்ல!
  • போராட்டத்தைத் தொடர்வோம்!

மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு. 99623 66321.

Exit mobile version