Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிள்ளையான் உள்ளே – ஆதரவாளர்கள் ஐரோப்பாவில்

pillaiyaan-gnanamபிள்ளையான் என்று அழைக்கப்படும் கிழக்கு மாகாணத்தின் முன்னை நாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்ட பின்னர் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜ சிங்கத்தின் கொலை வழக்குடன் தெதாடர்பு படுத்தப்பட்டு அவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
அவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலையுடனும் தொடர்பு படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரன்சை மையாமாகக் கொண்டு செயலாற்றும் பிள்ளையானின் ஆதரவுக் குழு கைது தொடர்பான கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை. கருணா பிள்ளையான் இணைந்திருந்த காலத்தில் கொள்ளையிடப்பட்ட மக்களின் சொத்துக்களின் ஒரு பகுதி பிரான்சில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தன.

பிரான்சைச் சார்ந்த பிள்ளையான் குழு கொலைகளுடன்  தொடர்புடையதா என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

கடந்த மாதம் பிள்ளையானின் ஆதரவாளர்கள் இணைந்து கிழக்கில் சந்திப்பு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

Exit mobile version