Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் நாட்டிற்குள் நுளைந்த ஆந்திர போலிஸ் படை மாவோயிஸ்டுக்களைக் கைது செய்தது

கைதான ரூபேஷ் மற்றும் ஷீனா
கைதான ரூபேஷ் மற்றும் ஷீனா

ஆந்திரப் பிரதேசப் போலிஸ் படை தமிழ் நாட்டுப் போலிசாரின் உதவியுடன் கோயம்புத்தூரில் மாவோயிஸ்டுக்களின் முக்கிய உறுப்பினர்களைக் கைது செய்தாகக் கூறுகிறது. கணவன் மனைவியான ரூபேஷ் மற்றும் ஷீனா ஆகியோரே கோயம்புத்தூரில் தலைமறைவாக இருந்த வேளையில் கைதானதாக தமிழ் நாடு போலிஸ் பிரிவு கூறுகின்றது.

கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) இன் மத்திய குழு உறுப்பினர்களன இவ்விருவரும் தமிழ் நாட்டில் அரசியல் செயற்பாட்டிற்காகத் தலைமறைவாக இருந்ததாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே இக் கைதுகள் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது.

தகவல் தொழில் நுட்பப் பட்டதாரியான ரூபேஷ் மற்றும் உச்ச நீதிமன்ற ஊழியரான ஷீனா ஆகியோர் மாவோயிஸ்ட்டுகளின் நீண்ட நாள் உறுப்பினர்கள். தமிழ் நாடு, கேரளா கன்னடா ஆகிய பிரதேசங்களை ஆயுதப் போராட்டத்திற்குத் தயார்படுத்துவதற்காக இவ்விருவரும் செயற்பட்டனர் என்ற தகவல்களை ஆந்திர போலிஸ் வெளியிட்டது.

ஆந்திரப் போலிஸ் படையும் தமிழ் நாடு போலிஸ் படையும் இணைந்து இவர்கள் இருவரும் தங்கியிருந்த வீட்டைச் சுற்றிவளைத்து கைது செய்தது. மேலும் மூவர் இவர்களுடன் கைதானதாகத் தெரியவருகிறது.

ஆந்திராவில் அப்பாவிக் கூலித் தொழிலாளர்கள் கைதானதை முன்வைத்து அரசியல் பிழைப்பு நடத்திய ‘ஈழ ஆதரவு’ பிழைப்புவாதிகள் ஆந்திரப் போலிஸ்

Exit mobile version