Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகிந்த ராஜபக்சவின் புத்தாண்டுச் செய்தி

mahindaகடந்த தசாப்தத்தின் மிகப்படும் இனக்கொலையாளி மகிந்த ராஜபக்ச எந்தச் சலனமுமின்றி புத்தாண்டை நேற்றுக் கொண்டாடி மகிழ்ந்தார். ஆட்சி அதிகாரம் மாற்றமடைந்தால் ராஜபக்ச குடும்ப அதிகாரம் அழிக்கப்பட்டுவிடும் என எண்ணியவர்களை எச்சரிக்கும் வகையில் தனது புத்தாண்டுக் களியாட்டங்கள் ஊடாக புதிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியத் தேர்தல் நெருங்கும் நிலையில் இலங்கையில் போர்க்குற்ற விசாரணை நடைபெற வேண்டும் என பிரித்தானிய வாக்குக் கட்சிகள் அறிக்கை வெளியிட்டுள்ளன. தமிழ் தேசிய வியாபாரிகள் பிரித்தானியக் கட்சிகளோடு ஒட்டிக்கொள்ள அதனைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஏகாதிபத்திய ஒட்டுக்குழுக்களான புலம்பெயர் தமிழ் தேசியப் பிழைப்புவாதிகள் ராஜபக்சவை வாழவைக்கும் பிரதான முகவர்கள்.

புலம்பெயர் நாடுகளிலிருந்து ஈழம் பிடித்துத் தருகிறோம் என்று ஏமாற்றிய தமிழ்த் தலைமைகள், தமிழர்களை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் போன்ற விம்பத்தை ஜனநாயக சக்திகள் மத்தியில் ஏற்படுத்தி உலக மக்கள் மத்தியிலிருந்து அன்னியப்படுத்தினர்.

இன்று மகிந்த ராஜபக்சவும் குடும்பமும் கோலாகலமாகக் கும்மாளமடிக்க அவரால் சிறைப்பிடிக்கப்பட்ட ஆயிரமாயிரம் அரசியல் கைதிகள் இன்னும் சித்திரவதைக் கூடங்களில் வாடுகின்றனர். சூறையாடப்பட்ட சிங்கள் மக்கள் பலருக்கு நேற்று புத்தாண்டு என்பதே நினைவிலிருக்கவில்லை.

Exit mobile version