Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மைத்திரிபால மக்களை ஏமாற்றிவிட்டு மீண்டும் ஊழல் ஆட்சியை நிறுவியுள்ளார்: அனுர குமார

Anura-Kumara-Dissanayakeஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் புதிய அர­சாங்கம் கொடுத்த வாக்­கு­று­திகள் அனைத்தும் மீறப்­பட்­டு­விட்­டன. அமைச்­ச­ரவை எண்­ணிக்­கை­யினை அதி­க­ரித்து, தேசிய அர­சாங்­கத்தை அமைத்­தமை கண்­ட­னத்­திற்­கு­ரி­யது என்று விசனம் தெரி­வித்­துள்ள மக்கள் விடு­தலை முன்­னணி, அரசின் தேசிய நிறை­வேற்று சபையில் இருந்து வெளி­யே­ற­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டது.
ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பலர் அர­சாங்­கத்­துடன் கைகோர்த்­தபின் நிமல் சிறி­பா­லடி சில்வா எதிர்க்­கட்சி தலை­வ­ரா­வாரா எனவும் அக்­கட்சி கேள்வி எழுப்­பி­யது.
மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினால் நேற்று பத்­த­ர­முல்­லையில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே ஜே.வி.பி யின் தலைவர் அனுர குமார திசா­நா­யக்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது;
ஜனா­தி­பதித் தேர்­தலின் போது தேசிய அர­சாங்­கத்தின் கட்­ட­மைப்பு தொடர்பில் மக்­க­ளிடம் ஏனைய அர­சியல் கட்­சி­க­ளிடம் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் மற்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகியோர் வாக்­கு­றுதி கொடுத்­தனர். மஹிந்த ராஜ­பக்ஷ சர்­வா­தி­கார ஆட்­சி­யினை வீழ்த்தி நாட்டில் ஜன­நா­ய­கத்­தினை கொண்­டு­வர வேண்டும் என்ற பிர­தான காரணம் முன்­வைக்­கப்­பட்­ட­துடன் அமைச்­ச­ரவை கூட்­ட­மைப்பு அதி­கா­ரப்­ப­கிர்வு என முக்­கிய விட­யங்கள் தொடர்பில் பேசினர். இதில் தனித்து மஹிந்த ராஜ­ப­க்ஷவை மட்டும் வீழ்த்­தி­யது மட்டும் அல்­லாது பிர­தான அமைச்­சர்கள் சில­ருக்கு எதி­ரா­கவும் செயற்­பட்டோம். ஆனால் இன்று அவர்கள் அனை­வ­ரையும் மீண்டும் அமைச்­சர்­க­ளாக தேசிய அர­சாங்­கத்­திற்குள் இணைத்துக் கொண்­டுள்­ளனர்.
மக்­களை மைத்­திரி ஏமாற்­றி­விட்டார்
மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நம்பி அவரை ஜனா­தி­ப­தி­யாக்­கிய பொது மக்­களை ஏமாற்­றி­விட்டு மீண்டும் ஊழல் அர­சாங்­கத்தை அவர் உரு­வாக்­கி­விட்டார். இன்று அமைச்­ச­ர­வையின் எண்­ணிக்கை 77 ஆக உயர்­வ­டைந்­துள்­ளது. இன்று உரு­வா­கி­யி­ருப்­பது தேசிய அரசு என்று சொல்­கின்­றனர். ஆனால் தேசிய அர­சாங்கம் தமது மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை மீறி­விட்­டது. இனிமேல் இவர்­களை தேசிய அர­சாங்கம் என கூற முடி­யாது. இவ்­வாறு ஒரு அர­சாங்­கத்தை நடத்த மக்கள் ஆத­ரவு தெரி­விக்­க­வில்லை, மக்கள் விரும்­பவும் இல்லை. ஏனவே அர­சாங்கம் எதிர்­வரும் 23 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்­தினை கலைத்து பாரா­ளு­மன்ற தேர்­தலின் மூலம் புதிய பாரா­ளு­மன்­றத்­தினை அமைக்க வேண்டும்.
அதேபோல் தேசிய நிறை­வேற்று சபையில் நாம் அங்கம் வகிக்­கின்றோம். தேசிய நிறை­வேற்று சபையின் மூலம் பல விட­யங்­களை வெளிக்­கொண்டு வந்­துள்ளோம். ஆனால் நாம் தேசிய அரசில் அங்கம் வகிக்­க­வில்லை. ஆனால் இன்று அர­சாங்­கத்தின் செயற்­பாட்டில் எமக்கு திருப்தி இல்லை. தொடர்ந்தும் தேசிய நிறை­வேற்று சபையில் அங்கம் வகிப்­பது தொடர்பில் நாம் தீர்­மா­ன­மெ­டுப்போம். அதே போல் இவ் தேசிய நிறை­வேற்று சபை தொடர்ந்து நீடிக்கப் போவது இல்லை. எனவே அவ­சி­ய­மில்­லா­த­வி­டத்து நாம் வெளி­யே­று­வதே சிறந்த முடிவு.
மேலும் இன்று பாரா­ளு­மன்றின் எதிர்க்­கட்சி யார்? தேசிய அர­சாங்கம் ஆளும்­த­ரப்பு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி எதிர்க்­கட்சி என்று சென்­றார்கள். ஆனால் இன்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தேசிய அரசில் இணைந்து விட்­டது. நாளை பார­ளு­மன்றம் கூடும் இதில் நிமல் சிறிபாலடி சில்வா எங்கு அமர்வார். அவர் எதிர்க்கட்சியா அல்லது ஆளும் கட்சியா என்பதை தெரிவிக்க வேண்டும். பாராளுமன்றத்தினை விளையாட்டு மைதானமாக்கிவிடக் கூடாது. எதிர்கட்சிக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. அதை இவர்கள் சரியாக செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version