Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விக்கியின் தலைமையில் அழிக்கப்படும் யாழ்ப்பாணம்: மல்லாகம் நீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து..

பிரித்தானியாவில் விக்னேஸ்வரனுடன் நிமலன்

வட மாகாண சபையின் விவசாய அமைச்சர் ஐங்கரநேசனும், சாமி வேடம் போடும் அதன் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் இணைந்து நடத்திய அழிப்பு நாடகத்திற்கு எதிராக மல்லாகம் நீதி மன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. மலேசிய பல்தேசிய வியாபார நிறுவனத்தின் இலங்கைக் கிளையான எம்.டி.ரி வோக்கஸ், நோதேர்ண் பவர் என்ற வியாபாரப் பெயரில் சுன்னாகம் பகுதியில் நடத்திய மின் உற்பதியின் போது வெளியேற்றப்பட்ட கிறீஸ் மற்றும் அதிபார டீசல் கழிவுகளை மக்கள் குடியிருப்புக்களில் வெளியேற்றி இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் பாவனைக்கு உட்படுத்தும் நீரை நாசப்படுத்திமை தெரிந்ததே.

இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் ரவூப் ஹக்கீம், சுன்னாகம் பகுதியைச் சூழ வரவுள்ள நிலத்தடி நீரை நஞ்சாக்கியமையைப் பாராளுமன்றத்தில் ஒப்புக்கொண்டு, அதற்குக் காரணமாகவிருந்த நிறுவனம் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அதன் பின்னர் சுன்னாகம் பகுதியிலிருந்து பாதிக்கப்பட்டதாகக் கருதப்ப்பட்ட சுற்றாடலில் வாழ்ந்த மக்களுக்கு குடி நீர் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், வட மகாண சபையின் சாமி முதலமைச்சர் விக்னேஸ்வரனும் அவரது நெருங்கிய சகாவும் விவசாய அமைச்சருமான ஐங்கரநேசனும் போலி நிபுணர் குழு ஒன்றை அமைத்து சுன்னாகம் பகுதியில் எண்ணைக் கழிவுகளால் நீர் மாசடையவில்லை என்றும் அங்கு மலக் கழிவுகளே மாசடைதலுக்குக் காரணம் என்றும் அறிக்கை வெளியிட்டனர். இதனால் குற்றவாளியான நிறுவனம் காப்பாற்றப்பட்டமை அனைவரும் அறிந்ததே.

இது தொடர்பாக மல்லாகம் நீதி மன்றம் துணிச்சலுடன் செயற்பட்டு, பல தடவைகள், ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிரான காத்திரமான தீர்புக்களை வழங்கியிருந்தது.

கடந்த வாரம் வழங்கப்பட்ட தீர்பில் நீரில் எண்ணையும் கிறீசும் கலந்திருப்பதும், அது மக்கள் பாவனைக்கு உகந்தது அல்ல எனவும் மல்லாகம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தவிர, “பல அரச அதிகாரிகள், மற்றும் பிழையான அறிக்கைகளைத் தயாரித்து வெளியிட்டவர்கள் ஏதாவது பணங்களையும் பெற்றுக்கொண்டு அவ்வாறு செயற்பட்டனரா என்ற கேள்வியும் மன்றுக்கு தோன்றுகிறது”. எனத் தனது தீர்ப்பின் இறுதியில் குறிப்பிட்டுள்ளது.

எம்.டி.ரி வோக்கஸ் என்ற நிறுவனம் அதன் துணை நிறுவனமான நோதேர்ன் பவர் இன் ஊடாக நடத்திய அழிப்பை மூடி மறைப்பதற்கு வட மாகாண சபையின் முதலமைசர் விக்னேஸ்வரன் மற்றும் ஐங்கரநேசன் ஆகியோர் செயற்பட்டமை இங்கு வெளிப்படையானது. “பிழையான அறிக்கை” என்பது வட மாகாண சபை மட்டுமே தயாரித்து வெளியிட்டது என்பது தரவு. ஆக, நீதிமன்றம் தனது சட்ட எல்லைகு உட்பட்டு சந்தேகங்களை வெளியிட்டுள்ளது.

ஐங்கரநேசன், விக்னேஸ்வரனைத் தவிர அவுஸ்திரேலியாவிலிருந்து விக்னேஎஸ்வரனை இயக்கும் மர்ம மனிதன் நிமலன் கார்த்திகேயனுக்கும் இந்த ஊழலில் பங்கு உண்டு என்ற சந்தேகத்தை இனியொரு… சுட்டிக்காட்டியிருந்தது.

விக்னேஸ்வரனுடன் நிமலன்

விக்னேஸ்வரன் வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம் அவருடன் நிழல் போன்று பின் தொடரும் நிமலன் கார்த்த்கேயன் அவுஸ்திரேலியக் குடியுரிமை பெற்ற இலங்கையர். எதிர்வரும் மாதங்களில் நிமலன் கார்த்திகேயனுக்கு வட மாகாண சபையில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிமலன் கார்த்திகேயனுடன் தொடர்புடைய மற்றொரு கும்பல் இலங்கையில் செயற்பட்டுவருகின்றதும் தெரியவருகிறது. அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை சென்று அங்கு கிளிநொச்சிப் பகுதியில் தனது அழிவு அரசியலை ஆரம்பித்துள்ள இக் கும்பல் தனது உள்ளூர் சகாக்களுடன் இணைந்து ஐங்கரநேசனை மையப்படுத்திய அழிவரசியலை ஆரம்பித்துள்ளது. சுன்னாகம் நிலத்தடி நீர் பணப் பரிமாற்றத்தில் இவர்களும் தொடர்பு கொண்டிருக்கலாம் என்ற தரவுகளும் இனியொருவிற்கு கிடைத்துள்ளன.

ஒரு புறத்தில் இனப்படுகொலை நடக்கிறது எனக் கூச்சலிடும் விக்னேஸ்வரனும், ஐங்கரநேசனும் அவர் சார்ந்த கும்பலும், மறுபுறத்தில் பேரினவாத அரசின் நடவடிக்கைகு நிகரான அழிப்பு நாடகத்திற்குத் துணை சென்றுள்ளனர். இந்த இருவர் மட்டுமன்றி, வட மாகாண சபை அமைத்த போலி நிபுணர் குழுவின் அங்கத்தவர்கள். நிமலன் கார்த்திகேயன் என்ற மர்ம மனிதன் உட்பட அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். வட மாகாண சபை தனது நடவடிக்கைக்காக மக்களிடன் மன்னிப்புக் கோர வேண்டும். எம்.டி.ரி வோக்கஸ் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும். சுன்னாகம் பகுதியிலுள்ள நிலக்கீழ் நீர் சுத்திகரிக்கப்படுவதற்கான செலவுத் தொகையை எம்.டி.ரி வோக்கஸ் இடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டு. இதனை நீதிமன்றம் நிறைவேற்றும் என உறுதிபட நம்புவோம்.

நீதிமன்றத் தீர்ப்பு:

 

Exit mobile version