Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையில் ஒரு சுதந்திர தினம் :::மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன்

இலங்கையில் ஒரு சுதந்திர தினம்

தலைமை நீதிபதிக்கே நீதி இல்லாத நாட்டில் ஒரு சுதந்திர தினம்!
உயர் பாதுகாப்பு வலயத்தினால் நடுத் தெருவில் நிற்பவர்க்கெல்லாம் ஒரு சுதந்திர தினம்!
மீளக் குடியேற முடியாமல் அந்நியரால் அடக்கப் பட்டவருக்கெல்லாம் ஒரு சுதந்திர தினம்!
சொந்தக் கடலில் மீன் பிடிக்க முடியாமல் அந்நியர் மீன் பிடிக்க ஒரு சுதந்திர தினம்!
சொந்த நிலத்தில் பயிர் செய்ய முடியாமல் அந்நியர் விளைச்சல் எடுக்க ஒரு சுதந்திர தினம்!
சொந்த மொழியில் தேசிய கீதம் பாட முடியாதவருக்கெல்லாம் ஒரு சுதந்திர தினம்!
இலட்சத்துக்கும் மேலாக இறந்தும் நீதி விசாரணை இல்லதோருக்கெல்லாம் ஒரு சுதந்திர தினம்!
சுதந்திரம் கேட்டவருக்கு அகல் விளக்கு கொளுத்த முடியாமல் ஒரு சுதந்திர தினம்!
இறந்தவருக்காக கோவிலில் பிரார்த்தனை செய்ய முடியாமல் ஒரு சுதந்திர தினம்!
இரவில் கதவைத் தட்டி பெண் கேட்பவனை தடுக்க முடியாமல் ஒரு சுதந்திர தினம்!
ஊர்ப் பெயரெல்லாம் மொழி மாற்றம் செய்ய அமைதியாக ஒரு சுதந்திர தினம் !
கோவில் இருந்த இடத்தில் புத்தர் புதிதாக முளைக்க ஒரு சுதந்திர தினம்!
பொட்டு வைத்து வெளியே செல்லப் பயந்தவருக்கெல்லாம் ஒரு சுதந்திர தினம்!
தமிழில் அலுவலகத்தில் பேசப் பயந்தவருக்கெல்லாம் ஒரு சுதந்திர தினம்!
பயத்தினால் வாகனத்தில் சிங்கக் கொடி கட்டியவருக்கெல்லாம் ஒரு சுதந்திர தினம்!
இன அழிப்பை மறைக்கும் கோடரிக் காம்புகள் எல்லாம் குதூகலிக்க ஒரு சுதந்திர தினம்!
இது தான் இன்று இலங்கையில் நடக்கும் ஒரு சுதந்திர தினம்!

Exit mobile version