Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நாட்டில் இரகசியத் தடுப்பு முகாம்கள் இல்லை- ரனில் காணாமல் போன கைதிகள் எங்கே?

BKகாணாமல் போனவர்கள் தொடர்பான பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாக ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இப்பட்டியலில் இடம்பெறாதவர்கள் உயிரிழந்து விட்டதாகவோ அன்றி நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவோ கருதவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இயங்கிவரும் இரகசிய தடுப்பு முகாம்கள் தொடர்பான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆக, இறுதி யுத்தத்தின் பின்னர் சரணடைந்த ஈரோஸ் இயக்கத்தின் முன்னை நாள் செயலாளர் பாலகுமார் உட்பட பலர் உயிருடன் கைதானதற்கான ஆதாரங்கள் உண்டு.

ரனில் குறிப்பிடுவதன் அடிப்படையில் அவர்கள் உயிருடன் தடுத்துவைக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது ரனில் விக்ரமசிங்க உடப்ட இலங்கை அரசு அவர்களின் உயிர்ப்பாதுகாப்பிற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.

காணாமல் போன அரசியல் கைதிகளைக் படுகொலை செய்துவிட்டு பட்டியலை வெளியிடும் அரச பயங்கரவாதம் குறித்து மக்கள் அறிந்து வைத்துள்ளனர்.

Exit mobile version