Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீக்கத்தைக் கொண்டாடும் புலம்பெயர் அமைப்புக்கள்

இராணுவத் தாக்குதல்களில் ஈடுபடாத காரணத்தால் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதப் பட்டியலிலிருந்து நீக்குவதாக ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் அறிவித்துள்ளது. எதுஎவ்வாறாயினும் அந்த இயக்கம் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய இயக்கமாகவே கருதப்படும் என தீர்ப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் புலிகள் இயக்கத்தின் தொடர்ச்சி என்ற தோற்றப்பாட்டைக் காட்டிக்கொள்ளும் பல அமைப்புக்கள் இத்தடை நீக்கம் பெரும் வெற்றியாகக் கொண்டாட ஆரம்பித்துள்ளன.

தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் தலைவிதியைத் தொலைவிலிருந்து இயக்க முற்படும் பெரும்பாலானஅமைப்புக்கள இலங்கை அரசின் பேரினவாவத ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு துரும்பைக்கூட நகர்த்தியதில்லை. மாறாக தமது சொந்த வர்த்தக நலன்களுக்காக விடுதலைப் புலிகளின் அடையாளத்தைப் பயன்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன.

தமிழ் பாராளுமன்ற அரசியல்வாதிகளாலும், இலங்கைப் பேரினவாத அரசியலாலும், சிறுகச் சிறுக அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ்ப் பேசும் தேசிய இனங்கள் தமது சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தைத் தொடர்வதற்கு மிகப்பெரும் தடையாக புலம்பெயர் வியாபாரிகள் செயற்படுகின்றனர்.

கடந்த காலத் தவறுகள் முற்றுமுழுதாக ஆரயப்படுவதும், அவற்றிலிருந்து எதிர்கால சந்ததி புதிய போராட்ட வழிமுறைகளைத் தெரிந்தெடுத்துக்கொள்வதும், இன்றைய அவசரத் தேவை.

விமர்சனங்களையும் சுய விமர்சனங்களையும் தீண்டப்படாதவை என்று மறுக்கும் பழைமைவாதக் கும்பல்கள், எதிரிகளுக்கு அவற்றைப் போராட்டத்தை அழிக்கும் குற்றச்சாட்டாக முன்வைக்க வழிவிட்டுக்கொடுத்துள்ளனர்.
போராளிகளின் தியாகங்களையும் இழப்புக்களையும், குற்றச்செயலாக மாற்ற முனையும் இவர்களின் ஊற்றுமூலம் புலம்பெயர் நாடுகளே.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்கம் போராட்டத்தில் மைற்கல் என்ற மாயையை ஏற்படுத்த முனையும் பெரும்பாலானவர்கள், அழிந்துகொண்டிருக்கும் தேசிய இனம் குறித்துச் சிந்திபதில்லை,

Exit mobile version