Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ராஜபக்சவை ஆட்சியில் அமர்த்த பான் கீ மூன் நிதி வழங்கினார்

ban1rajapaksa2005 ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்சவைப் ஜனாதிபதிப் பதவியில் அமர்த்தும் நோக்கத்துட்ன் அமெரிக்கா தனது ஆதரவாளர்கள், துணை அமைப்புக்கள் ஊடாகச் செயற்பட்டது.

2004 ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டு வரை தென்கொரியாவின் வெளிநாட்டு அமைச்சராகப் பதவிவகித்த பன் கீ மூன் ராஜபக்சவை வெற்றிபெறச் செய்வதற்காக அமெரிக்க அரசின் அடியாளாகச் செயற்பட்டார்.

2004 ஆம் ஆண்டு சுனாமி அழித்துத் தணிந்திருந்த காலத்தில் தென் கொரியாவின் வெளி நாட்டமைச்சராகவிருந்த பன் கீ மூன் இலங்கைக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்கிறார். பன் கீ மூனின் வருகையுடன் மகிந்த ராஜபக்ச ஹெல்பிங் ஹம்பாந்தோட்ட என்ற உதவி நிதியத்தை ஆரம்பிக்கிறார்.

பான் கீ மூன் ராஜபக்சவுடன் உலாவந்த அதேவேளை,, அந்த நிதியத்திற்கு இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் நிதி வழங்குகிறார். பல மில்லியன்கள் பெறுமதியான இந்த நிதியை ராஜபக்ச களவாடுகிறார். பின்னதாக இதுவே ராஜபக்சவின் 2005 ஆம் ஆண்டு வெற்றிக்கான தேர்தல் பிரச்சார நிதியாகப் பயன்படுத்தப்பட்டது.

கொரிய அரசினால் வழங்கப்பட்ட நிதி தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் ராஜபக்ச மறைத்து அழித்துவிட்டர்.  இதுதொடர்பாக சண்டேலீடர் ஊடகம் பிரதம மந்திரி ராஜபக்சவைக் கேள்வியெழுப்பிய போது பான் கீ மூன் இடமிருந்து நிதி பெற்றுக்கொண்டதை ஒப்புக்கொள்ளும் ராஜபக்ச அது குறித்த விபரங்களை வெளியிட மறுக்கிறார். தனது செயலாளர் லலித் வீரதுங்கவைக் கேட்குமாறு தப்பிக் கொள்கிறார்.

2007 ஆம் ஆண்டு பன்கீ மூன் ஐ.நாவின் செயலாளராகப் பதவியேற்க ராஜபக்ச இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்துகிறார்.

ராஜபக்ச அரசிற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் கொடுக்கப்பட்ட வேலை 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தோடு நிறைவிற்கு வர அமெரிக்க்காவின் புதிய அடியாட்படை ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கூறுகளான தன்னார்வ நிறுவனங்களையும், மனித உரிமை அமைப்புக்களையும், ஐ.நா போன்ற உலக நிறுவனங்களையும் நம்பக் கோரிய தமிழ்த் தலைமைகள் போருக்குப் பின்னான ஆறு வருடங்களில் மக்கள் எழுச்சிகளை ஒடுக்கும் வேலையைக் கச்சிதமாக அமெரிக்காவிற்குச் செய்து கொடுத்திருக்கின்றன.

இன்று பேரினவாத அரசு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆணையுடன் செயற்படுகிறது அதே வேளை அதன் எதிர்த்தரப்பு அனைத்துமே அமெரிக்க அரசின் பிடியிலேயே உள்ளது.

இன்று அமெரிக்க அரசு போர்க்குற்ற விசாரணை  தேவையற்றது என கூறுகிறது.

ஆதாரம்:

http://www.thesundayleader.lk/20050703/spotlight.htm

Exit mobile version