Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

7500 புலிகள் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் : இலங்கை

7500 தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள், போரை வழிநடத்தியவர்கள் உள்ளடங்கிய 700 பேரும் இதில் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட மேலும் இரண்டாயிரம் பேர் விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னர்  வெளியான தகவல்களின் அடிப்படையில்  15 போராளிகள் மற்றும்  பொதுமக்கள் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்  எனத் தகவல்கள்  வெளியாகின.

Exit mobile version