Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

டுபாய் வங்கியில் 500 மில்லியன் டொலரை வைப்புச் செய்தது ரனிலா மகிந்தவா?

சுனில் ஹந்­துன்­நெத்தி
சுனில் ஹந்­துன்­நெத்தி

இலங்­கைப் ­பா­ரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் டுபாய் வங்­கியில் 500 மில்­லியன் அமெ­ரிக்க டொலரை மீளப்­பெற்­றுள்­ள­தா­கவும், இலங்­கையின் முன்­ன­ணிக்­ கு­டும்பம் ஒன்று அதே வங்­கியில் மூன்று பில்­லியன் அமெ­ரிக்க டொலரை வைப்புச் செய்­தி­ருப்­ப­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்ள நிலையில், மேற்­படி செயற்­பா­டு­களின் பிர­தா­னிகள் யார் என்­பதை அர­சாங்கம் பகி­ரங்­கப்­ப­டுத்த வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்­துன்­நெத்தி வலி­யு­றுத்­தியுள்ளார்.

நேற்று பாராளுமன்ற அமர்வுகளின் போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
டுபாய் வங்­கியில் மூன்று பில்­லியன் அமெ­ரிக்க டொலரை வைப்புச் செய்­துள்ள முன்­னணிக் குடும்­பத்­தினர் யார்? ரணில் விக்­கி­ர­ம­சிங்க குடும்­பத்­தி­னரா? அல்­லது ராஜ­பக் ஷ குடும்­பத்­தி­னரா என்றும் அவர் கேள்­வி­யெ­ழுப்­பினார்

Exit mobile version