Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

3வது நாளாக தொடரும் லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்

Chennai_01இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி லயோலா கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டுவரும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் 3வது நாளாக நடந்து வருகிறது.

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும், சர்வதேச விசாரணை கோரியும் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 8ஆம் தேதி தொடங்கிய இந்த காலவரையற்ற உண்ணாவிரதம் 3வது நாளாக இன்றும் நீடிக்கிறது.உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் அவர்களை, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்க கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிக்காமல், இந்தியா தாமாக முன்வந்து இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டுவரவேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version