Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

2013 பொதுநலவாய நாடுகளின் மாநாடு இலங்கையில்!

பொது நலவாய நாடுகளின் 2013 ஆம் ஆண்டின் மாநாட்டினை cwFlagஇலங்கையில் நடத்துவதற்கு கிடைத்த அங்கீகாரமானது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிறந்த தலைமைத்துவத்துக்குக் கிடைத்த பரிசாகும் என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

ட்ரினிடாட் டுபெகோவில் கடந்த மாதம் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டு அங்கு ஆராயப்பட்ட விடயங்கள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நேற்று இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மகிந்த  ராஜபக்சவின்  போர்க்குற்றங்கள்  குறித்து  பொதுநலவாய உறுப்பு நாடுகள்  கேள்வியெழுப்பியிருந்தன  என்பதும்,  ராஜதந்திர  அரசியல் காரணங்களுக்காக  அவை கைவிடப்பட்டன  என்பதும்  இங்கு  குறிப்பிடத்தக்கது.

Exit mobile version