Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஹெய்ட்டியில் குழந்தைகளை எடுத்து செல்ல முயன்ற அமெரிக்கர்கள் தடுத்து வைப்பு!

ஹெய்ட்டியில் இருந்து எவ்வித அனுமதியும் இல்லாமல் முப்பது இளம் சிறார்களை வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல முயன்ற அமெரிக்கர்கள் குழு ஒன்றை ஹெய்ட்டி அதிகாரிகள் பிடித்து வைத்துள்ளனர்.

இந்த சிறார்கள் நிலநடுக்கத்தால் அனாதையானர்கள் என்பதற்கானா ஆதாரமோ அல்லது வெளிநாட்டு கொண்டு செல்வதற்கான அனுமதியோ இந்த பத்து அமெரிக்கர்களிடம் இல்லை என ஹெய்ட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் அமெரிக்காவில் உள்ள தேவாலயம் ஒன்றை சேர்ந்தவர்கள் என்று கூறும் இந்த குழுவினர், அண்டைய நாடான டோமினிகன் குடியரசில் தாங்கள் அனாதை ஆசிரமம் ஒன்றை நிறுவ திட்டமிடுவதாக தெரிவித்துள்ளனர்.

தத்து எடுப்பது தொடர்பில் ஹெய்ட்டி புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக பெற்றோர் இல்லாத குழந்தைகளை கடத்தி அவர்களை தத்தெடுப்பவர்களுக்கு விற்பது, வீட்டு வேலை செய்ய விற்பது அல்லது பாலியல் அடிமைகளாக விற்பது போன்றவை இடம்பெறலாம் என்ற அச்சம் அதிகரித்த பின்னர் இந்த கட்டுப்பாடுகள் வந்துள்ளது.

 BBC.
Exit mobile version