Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

1.4 மில்லியன் வாக்குகளால் நான் முன்னணியிலிருந்தேன் : சரத் போன்சேகா

“நாம் தான் வெற்றி பெற்றோம் என்பது நூறு வீதம் நிறுவப்பட்டிருந்தது. 1.4 மில்லியன் வாக்குகளால் நான் முன்னணியிலிருந்தேன். கணணி மூலம் அனுப்பப்பட்ட மின்னியல் தரவுகளில் மோசடி செய்யப்பட்டதனூடாக ராஜபக்சவின் வெற்றி அறிவிக்கப்பட்டது. தரவுகளைக் கையாள்வதற்கு எதிர்க்கட்சி முகவர்கள் சிலருக்கும் கையூட்டு வழங்கப்பட்டுள்ளது.” – இவ்வாறு சரத் போன்சேக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு இன்று வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார். இதே வேளை தனது உயிருக்கு இன்னும் ஆபத்து நிலவுவதாகவும், பாராளுமன்றத் தேர்தலில் தான் பங்குபற்றப் போவதாகவும் தெரிவித்தார். பாராளுமன்றத் தேர்தலில் தான் பங்காறாவிடின் தன்னை நம்பிய மக்களை ஏமாற்றுவதாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார். இதே வேளை கணணியூடான மோசடி குறித்த செய்திகள் நேற்றய தினமே வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version