பெயர்
.
தெரியாத தொலைத் தொடர்பு அமைச்சக அதிகாரிகள் சிலர் மீது வழக்கு தொடுத்துள்ளதுடன், பல மாதங்களாக விசாரணை நடத்தப்பட்டுவரும் நிலையில் யாருக்கு எதிராக இந்த விசாரணை நடக்கிறது என்பதே தெரியவில்லை என சிபிஐ கூறுவது எப்படி என்பதை நீதிமன்றம் தெரிந்துகொள்ள விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். தொலைத்தொடர்பு சேவை உரிம அனுமதி வழங்கியதில் அரசு ஊழியர்களுக்கும் தனி நபர்களுக்கும் இடையே தொடர்பு இருந்துள்ளது. இது கிரிமினல் சதி என்று தான் கூறவேண்டும். இந்த விவகாரத்தில் இடைத்தரகர்களுக்கும் தொடர்பு உள்ளது என மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான விசாரணை சார்ந்த ஆவணங்களை சிபிஐ, அமலாக்க இயக்குநரகம் ஆகியவற்றிடம் இருந்து உச்ச நீதிமன்றம் கேட்டுப்பெறவேண்டும். மேலும் இந்த விசாரணை தொடர்பான அவ்வப்போதைய நிலவரம் பற்றி அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிடவேண்டும் என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். வுக்கும் வைஷ்ணவி கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் ராடியா என்பவருக்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் உரையாடல் பதிவு அடங்கிய ஒலிப்பதிவையும் மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்த உரையாடல் பதிவு நாடா சிபிஐ வசம் 9 மாதங்களாக உள்ளது. ஆனால் விசாரணைக்காக ராடியா அழைக்கப்படவில்லை. அரசியல் செல்வாக்கு மிக்க சிலரை காப்பாற்றவே விசாரணை தடுக்கப்படுகிறது என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். அமைச்சர் ராசா இலாகாவின் கீழ் உள்ள தொலைத்தொடர்புத்துறை, 2008ல் ரூ.1658 கோடி என்ற மிகக் குறைந்த விலையில் 122 ஆபரேட்டர்களுக்கு முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் அலைக் கற்றையை ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். 2ஜி உரிமங்களை தொலைத்தொடர்பு சேவை வழங்குவோர்களுக்கு ஏல முறையில் ஒதுக்கீடு செய்ய அமைச்சர் ராசா முன்வருவார் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.மனுதாரர்கள் தரப்பில் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகினார். அமைச்சர் ராசாவுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதை நிரூபிக்கும் ஆவணங்கள் இருந்தபோதிலும் இது பற்றி சிபிஐ விசாரிக்க ஆர்வம் காட்டவில்லை என பிரசாந்த் பூஷன் வாதிட்டார்