Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வை.கோ மீது குற்றம் சுமத்தும் இலங்கை அரச உளவாளி கே.பி

இறுதி யுத்த  காலப் பகுதியில் புலிகளின்  சர்வதேசத் தொடர்பாளராக நியமிக்கப்பட்டிருந்த  கே.பி,  அனைவருடனும்  தொடர்புடனிருந்தார். இந்திய உளவுத்துறை  புலிகளுடன்  தொடர்பிலிருந்த  அனைவரின் தொலைபேசியையும்  ஒட்டுக்கேட்கும்  வலிமையில்ருந்தது. வை.கோ இந்திய அரசிற்கு எதிராக எப்போதும் அரசியல்நிலைபாடு  எடுத்ததில்லை.  இந்த நிலை  இலங்கை அரசை நியாயப்படுத்தும் நோக்கோடு அதன் உளவாளியான கே.பி. அறிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தின் ம.தி.மு.கவின் பொதுச் செயலாளர் வை.கோவின் நடவடிக்கைகளினால் இறுதி நேரத்தில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த முடியாமல் போனதாக குமரன் பத்மநாதன் அறிவித்துள்ளார்.

இந்திய மத்திய அரசாங்கம் போர் நிறுத்தமொன்றை அமுல்படுத்த முனைப்பு காட்டிய போதிலும், வை.கோ அந்த யோசனைத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர் உச்சக் கட்டத்தை அடைந்த சந்தர்ப்பத்தில் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இந்தியாவின் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தீர்வினை ஏற்றுக்கொள்ளல் மற்றும் ஆயுதங்களை களைந்து சரணடைதல் ஆகிய கோரிக்கைகளுக்கு உடன்பட்டால் போர்நிறுத்தத்தை அமுல்படுத்த முடியும் என இந்தியா அறிவித்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தத் தகவல்கள் வை.கோவிடம் பரிமாறப்பட்டதாகவும் இதனை வை.கோ ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் இறுதி நேரத்தில் ஒத்துழைக்கவில்லை என குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version