Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வெள்ளை வான்களில் கடத்தி மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுபட முடியுமா? : அர்ஜூன ரணதுங்க

நாள் தோறும் வெள்ளை வான்களில் நபர்களைக் கடத்தி மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுபட முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
போரை வழிநடத்திய தைரியமிக்க படைவீரர்களை கைது செய்து தடுத்து வைத்து, வெள்ளை வான்களில் நபர்களைக் கடத்தி மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை முறியடிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கு எதிராக கூக்குரல் இட்டு போராட்டங்களை நடத்துவதன் மூலம் மனித உரிமை குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுபட முடியாது. உண்மையாகவே மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அரசாங்கம் மனித உரிமைகளை பாதுகாக்கின்றது என்றால் அரசியல் கைதியான சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவின் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அர்ஜூன ரணதுங்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Exit mobile version