Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வெளி நாட்டுச் சஞ்சிகைகளையும் தடைசெய்யும் இலங்கை அரச பாசிசம்!

ஹிமால் மற்றும் த எகொனமிஸ்ட் ஆகிய சஞ்சிகைகளின் ஏப்பிர மூன்றாம் திகதிக்கான வெளியீடுகளை இலங்கை அரசு தடைசெய்துள்ளது. இலங்கை விமான நிலையத்தில் சுங்கப் பரிசோதனை அதிகாரிகளால் இவை தடுத்து வைக்கப்பட்டுள்ளன. ஹிமால் சஞ்சிகையில் மகிந்த ராஜபக்ச மற்றும் ஜே.ஆர்.ஜெயவர்த்ன ஆகியோரை ஒப்பிட்டு வெளிவந்த கட்டுரை காரணமாகவே இது தடைசெய்யப்பட்டுள்ளது. இதே வேளை தன்னார்வ நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பண உதவித்தொகை குறித்த கட்டுரை ஒன்றிற்காகவே தடைசெய்யப்பட்டுள்ளது. இது குறித்துக் கருத்து வெளியிட்ட விஜிதயாப்ப புத்தக நிலைய உரிமையாளர், சுங்க அதிகாரிகள் அனைத்து வெளியீடுகளையும் வாசித்த பின்னரே அதனை நாட்டினுள் அனுமதிக்கிறார்கள் என்றார்.

Exit mobile version