தவிர,
சீபா ஒப்பந்ததிற்குப் பின்னதாக தமிழ்நாட்டில் கைதுகளை மேற்கொள்ளவும் பாதுகாப்பைப் பலப்படுத்தவும் மத்திய மாநில அரசுகளே திட்டமிட்டு இவ்வாறான செயற்ப்பாடுகளை மேற்கொண்டிருக்கலாம் எனவும் பரவலான அபிப்பிராயம் நிலவுகிறது. இலங்கை இனப்பிரச்சனையில் தமிழக அரசும் இந்திய அரசும் பலத்த எதிர்ப்பை அறிவுஜீவிகள் மற்றும் படித்த இளைஞர்கள் மத்தியிலிருந்து எதிர்கொண்டு வருகிறது. மத்திய மானில அரசுகள் எண்ணியது போல் இந்த உணர்வலையை ஒடுக்க முடியவில்லை. இவற்றைக் கையாளும் வகையில், மக்கள் மத்தியில் எதிர்ப்பை உருவாக்கும் வகையில் இந்திய உளவுத்துறை திட்டமிட்டு மெற்கொண்ட செயலா இந்தத் தண்டவாளத் தகர்ப்பு என சந்தேகங்கள் உருவாகின்றன என்று இந்திய இராணுவ ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.