Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விஜித தேரரைக் கொலையின் விழிம்பிற்கு அழைத்துச்சென்ற இலங்கை அரச அடியாட்படைகள்

Wadarakka-attacஇலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவால் இஸ்லாமியத்த் தமிழ்த் தேசிய இனத்தின் மீதான இனச்சுத்திகரிப்பை நடத்துவதற்கு கட்டவிழ்த்துவிடப்பட்ட பொது பல சேனா என்ற பயங்கரவாத அமைப்பினர் வட்டரக்க விஜித தேரர் என்ற பௌத்த துறவி மீது தாக்குதல் நடத்தியமை தெரிந்ததே. இஸ்லாமியர்கள் மீதான வெறித்தனமான இனச்சுத்திகரிப்பைக் கண்டித்துவந்த அவர் மீதான தாக்குதலை பௌத்த பீடங்கள் கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வட்டரக்க விஜித தேரர் இன்று அதிகாலை இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு ஆண் உறுப்பு மற்றும் உடல் எங்கும் பிளேட்டினால் வெட்டப்பட்ட நிலையில் பாணந்துறை பொல்கொட ஆற்றுக்கு அருகில் இன்று காலை 7.30 மணியளவில் பிரதேசவாசிகளால் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நிப்போன் ஹோட்டலில் அவர், அண்மையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டை தடுத்ததுடன் அந்த மாநாட்டை நடத்தவேண்டாம் என பொதுபல சேனா அமைப்பினர் அவரை அச்சுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதே வேளை புலம்பெயர் நாடுகளில் இலங்கை அரச ஆதரவு அடியாள் குழுக்களே இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தை நடத்துவதாக நாடகமாடி மக்களின் போராட்டங்களைக் கடத்திச் செல்லும் சதித் திட்டம் நிறைவேற்றப்படுகின்றது. இத் திட்டத்திற்கு எதிரான உறுதியான அரசியலை முன்வைத்து சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டிய கடமை மக்கள் சார்ந்த அரசியல் சக்திகளிடம் உள்ளது.

Exit mobile version