விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவை நாடு கடத்த இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்தார். இதையடுத்து, அவரை திரும்ப ஒப்படைக்குமாறு ஸ்வீடன் அரசு இங்கிலாந்து அரசிடம் கோரியது.
இதை எதிர்த்து அசாஞ்சே இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த 7 நீதிபதிகளில், 5 பேர் அசாஞ்சேவை நாடு கடத்தவேண்டும்’ என்று கூறினர்.
இதையடுத்து, இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் அசாஞ்சேவை ஸ்வீடன் நாட்டுக்கு கடத்த ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது.
இங்கிலாந்து நாட்டு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அசாஞ்சேயின் சார்பில் வாதாடும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.