Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வன்னிப் போரில் தாய்லந்து விமானங்களும் தாக்குதல்?

இலங்கைப் படையினரின் இறுதிக்கட்ட தமிழின அழிப்பு போர் நடவடிக்கைக்கு, தாய்லாந்து விமானப் படையினரும் உதவியுள்ளனர் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

சிறிலங்காப் படையினர் வன்னியில் மேற்கொண்ட போர் நடவடிக்கைக்கு பன்னாடுகள் சில உதவியளித்திருந்தன.இதில் சில நாடுகள் நேரில் பங்கேற்றும் இருந்தன.

இந்நிலையில் தற்போது, தாய்லாந்து வான்படையினரும் மிகைஒலி தாக்குதல் விமானங்களை அனுப்பி, தமிழின அழிப்பிற்கு உதவியுள்ளளதாக தெரியவந்துள்ளது.

சிறிலங்காப் படையினரின் போர் நடவடிக்கைக்கு இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, இஸ்ரல் உள்ளிட்ட பல நாடுகள் உதவியுள்ளதுடன், வான்படையினரின் தாக்குதல் நடவடிக்கைக்கு தாய்லாந்து வான்படையினர் முழுமையான பங்களிப்பினை வழங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வன்னியில் தாக்குதல் நடவடிக்கைக்கு ஈடுபடுத்திய தாய்லாந்து விமானங்கள், தற்போது தாய்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன என்று தெரியவந்துள்ளது.

Exit mobile version