Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வட, கிழக்கில் அரச ஆதரவுடனான புதிய குடியேற்றங்கள் ஆபத்தானவை – ஆணைக்குழுவிடம் கர்தினால் மல்கம் ரஞ்சித்

வட,கிழக்கில் அரச ஆதரவுடன் புதிய குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக அவதானிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையானது புதிய காலணித்துவமாக பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கையானது மிகவும் அபாயகரமானது.

இதனைத் தவிர்த்துக் கொள்வது அவசியம் என மல்கம் கர்தினால் ரஞ்சித் அவர்கள் நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக தெரிவித்துள்ளார். அத்துடன் இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கைகள் தீவரப்படுத்தப்படுவது அவசியமென நாங்கள் நம்புகிறோம் எனவும், கடந்த காலத்தில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினராலும் தவறுகள் இழைக்கப்பட்டுள்ளன, இப்போது அவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதே முக்கியமானதாகும், இவ்வாறு பாடங்களைக் கற்றுக்கொள்ளுதல் மற்றும் பரஸ்பர மன்னிப்பைக் கோருவதற்கான தன்மைகள் உண்மையான நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் எனவும் கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Exit mobile version