Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வடக்கில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட வேண்டும் : கோத்தாபய

bbs_gotaவடமாகாணத்தில் தமிழர்கள் மட்டும் வாழ்வதை ஏற்றுக்கொள்ள முடியாது, சிங்கள மக்கள் அங்கு நிலங்களை வாங்கிக் குடியேற வேண்டும் என கோதாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். போர்க்குற்றவாளியும், இனப்படுகொலையின் சூத்திரதாரியுமான கோதாபய இலங்கையின் அரச அதிகாரத்தைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார். பாதுகாப்புச் செயலாளர் பதவிவகுக்கும் இவர், யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா உள்ளிட்ட வட மாகாணத்தின் மாவட்டங்களில் சிங்கள மக்கள் காணி கொள்வனவு செய்யும் உரிமையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
பெரும் எண்ணிக்கையிலான வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இதேபோன்று ஏனையவர்களும் நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் எந்தவொரு பிரதேசமும் தனியொரு இனத்திற்கான பிரத்தியேக இடமாக இருக்கக் கூடாது என கோதபாய தெரிவித்துள்ளார்.
வடகிழக்கில் நடபெறுவது இயல்பான இடப்பெயர்வுகள் அல்ல. சாரி சாரியாக நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள். கோதாபய போன்ற பேரினவாதிகளே அவற்றை ஒழுங்கு செய்கின்றனர். 60 வருடங்களாகச் சிறுகச் சிறுக நடத்தப்பட்ட குடியேற்றங்கள் கிழக்கில் தமிழ்ப் பேசும் மக்களைச் சிறுபான்மையினராக்கியுள்ளது.

Exit mobile version