
பெரும் எண்ணிக்கையிலான வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இதேபோன்று ஏனையவர்களும் நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் எந்தவொரு பிரதேசமும் தனியொரு இனத்திற்கான பிரத்தியேக இடமாக இருக்கக் கூடாது என கோதபாய தெரிவித்துள்ளார்.
வடகிழக்கில் நடபெறுவது இயல்பான இடப்பெயர்வுகள் அல்ல. சாரி சாரியாக நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள். கோதாபய போன்ற பேரினவாதிகளே அவற்றை ஒழுங்கு செய்கின்றனர். 60 வருடங்களாகச் சிறுகச் சிறுக நடத்தப்பட்ட குடியேற்றங்கள் கிழக்கில் தமிழ்ப் பேசும் மக்களைச் சிறுபான்மையினராக்கியுள்ளது.