Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வடக்கில் ஆயுதக் குழு வன்முறைகள் : ஆனந்தசங்கரி

வடக்கில் ஆயுதக் குழுக்கள் இயங்கி வருவதாகவும், இதனால் பல்வேறு சிக்கல் நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து ஆனந்த சங்கரி, ஜனாதிபதிக்கும் ஊடகங்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

ஆயுதக் குழுக்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளமை அதிருப்தி ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதுகாப்பு அவசியமென்றால் அரசாங்கப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், அரசியல் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் காரணமாக சுதந்திரமாக எவரும் சாட்சியமளிக்க முன்வருவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

 அரசாங்கத்தைத் தவிர வேறு எந்தக் குழுவும் ஆயுதங்களை பயன்படுத்தவில்லை எனவும், தமிழர் விடுதலைக் கூட்டணி யாரைச் சுட்டுகின்றதென்பது புரியவில்லை எனவும் ஈ.பி.டி.பி. தெரிவித்துள்ளது.

Exit mobile version