Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வடக்கிலிருந்து இராணுவத்தை மீளப்பெற மாட்டோம் : சம்பிக்க

வடக்கில் பயங்கரவாதத்தின் அச்சம் தொடர்ந்துகொண்டிருப்பதால் அங்கு நிறுவப்பட்டுள்ள எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படமாட்டாது. வடக்கின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
புதன்கிழமை நடைபெற்ற ஜெனீவா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையில் புலிகளின் நடவடிக்கைகள் மீட்சி பெற்றுள்ளதான தோற்றப்பட்டை இலங்கை அரசு ஏற்படுத்துவது வடக்கைத் தொடர்ச்சியாக இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கே என பரவலான கருத்து நிலவுகிறது. தவிர, இந்தியாவின் பங்களிப்பும் இதன் பின்னணியில் அமைந்திருக்கலாமா எனற சந்தேகங்களும் நிலவுகின்றன.

Exit mobile version