Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வங்கதேசத்தில் மீண்டும் மதச்சார்பற்ற கல்வி : சட்ட அமைச்சர் தகவல்

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த   தீர்ப்பின்அடிப்படையில், நாட்டில் மதச்சார்பற்ற கல்வி நடைமுறைக்கு வரும் என்று சட்டஅமைச்சர் சபீக் அகமது கூறினார்.

மதத்துடன் அரசியலைக் கலக்கக் கூடாது என்று வங்கதேச உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1972ல் நிறைவேற்றப்பட்ட அரசியல் சட்டம் தேசியம், சோசலிசம், ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய நான்கையும் அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்டிருந்தது. ஆனால், 1979ல் நிறைவேற்றப்பட்ட ஐந்தாவது அரசியல் சட்ட திருத்தம் ராணுவ அரசுகளை சட்டபூர்வமாக்கிய துடன், மதக் கல்வியையும் நியாயப்படுத்தியது.

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மதத்தைக் காயப் படுத்தவில்லை. மாறாக எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாதக் கட்சியின் அவ தூறுப் பிரச்சாரங்களையும் மீறி மதத்தை நிலைநிறுத்தி யுள்ளது என்று ஆசிரியர்கள் மாநாட்டில் உரையாற்றும்போது அமைச்சர் குறிப்பிட்டார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவாமி லீக் தலைமையிலான கூட்டணி அரசு வரவேற்றுள்ளது. தீர்ப்பின் முழு விபரத்தையும் ஆராய்ந்த பின்னரே கருத்துகூற முடி யும் என்று வங்கதேச தேசி யவாதக் கட்சி தெரிவித்துள் ளது. இஸ்லாமிய அரசிய லைத் தடைசெய்யும் சதியின் ஓர் அங்கம் என்று ஜமாத் – இ- இஸ்லாமி கட்சி கூறியுள்ளது.

Exit mobile version