Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லிபியா மீதான நேட்டோ நாடுகளின் தாக்குதலுக்கு எதிராக இலங்கை அமைச்சர் தலைமையில் ஆர்ப்பாட்டம்

லிபியா மீதான நேட்டோ நாடுகளின் விமானத் தாக்குதல்களுக்கு எதிராகவும் லிபியாவுக்கு ஆதரவாகவும் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தலைமையில் இவ்வார்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் உள்ளிட்ட பல அமைப்புக்களின் பிரதிநதிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். இன்று காலை 10 மணியளவில் ஐ.நா அலுவலகம் முன்பாக ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, கனடா உள்ளிட்ட மேற்குல நாடுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அத்துடன் லிபியாவிலிருந்து எண்ணெய் வளத்தை கொள்ளையிடவே அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் கொலைககளை செய்வதாகவும், நாங்கள் என்றுமே லிபியாவுடனேயே இருப்போம் எனவும், பான் கீ மூன் ஐக்கிய நாடுகள் சபையை ஒபாமாவிடம் காட்டி கொடுத்துவிட்டார் என்றும், மீண்டும் ஒரு உலக யுத்தத்தை ஏற்படுத்த பான் கீ மூன் முயற்சிசெய்கின்றார் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

மேற்கு நாடுகள் ஒரு புறத்திலும் லிபிய அரசிற்கு ஆதரவானகள் மறுபுறத்திலுமாக இரண்டு மக்கள் விரோத அணிகளிடையே நடைபெறும் யுத்தத்தை அரபு நாட்ட்டு ஜனநாயக சக்திகள் எதிர்த்து வருகின்றன.

Exit mobile version