Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லசந்த விக்ரமதுங்கவிற்கு மற்றுமொரு சர்வதேச ஊடக விருது

சர்வதேச ஊடக நிறுவனத்தினால் வழங்கப்படும் துணிகர ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச விருது அமரர் லசந்த விக்ரமதுங்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

வியன்னாவில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் லசந்தவின் சகோதரரும், சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான லால் விக்ரமதுங்க இந்த விருதினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

லசந்த விக்ரமதுங்க, மேய் சிடியாக், லாவுசானர் கார்னர், நெடி செனர், லைடியா காசோ, பாப் சய்னே, அக்பர் கான்சி மற்றும் யோஹானி சான்சீஸ் ஆகிய ஊடகவியலாளர்கள் இந்த விருது வழங்கும் விழாவில் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச ஊடக நிறுவனம் 60 ஆவது ஆண்டு நிறைவை இந்த ஆண்டு கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நெருக்கடியான நிலைமைகளில் துணிகரமாக ஊடகப் பணியில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் இந்த விருது வழங்கும் விழாவில் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version