Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ரிசானா, இஸ்லாத்தின் பெயரால் இனி அழவேண்டாம்.. : கலீல்

மரணத்தின் விழிம்பில் மனிதகுலம்
உனக்கும் சேர்த்தே அழுதுகொண்டிருந்தது.
மேசிடேஸ் காரில் பயணித்துக்கொண்டே பன் கீ மூனும்,
இரத்தக்காற்றை சுவாசித்தவாறே ராஜபக்சவும்,
இஸ்லாத்தின் பெயரால் அழுகிப்போனவனும் கூட,
உனக்கும் சேர்த்தே அழுதாகக் கூறிக்கொண்டான்..

உம்மாவின் தாய்பால் சற்று நேரத்தின் பின்னால்
உன் வாய்வழியே இரத்தமாக வழிந்தது…
உனது கண்ணீர்
வரண்டுபோன நிலத்தைச் சுடும் முன்னமே
உணர்வுகள் எரிந்தன,
இப்போதும் மனித குலம் மட்டுமே
உனக்காக அழுதது..
ரிசானா,
இஸ்லாத்தின் பெயரால் இனி அழவேண்டாம்..
அல்லாஹ் சொன்னதாக அமரிக்க அடிமைகள்
ஒப்புவிபதைக் கேட்கவேண்டாம்….
மகிழ்ச்சியைத் தெரியாத இவர்கள்
எங்கள் இன்பத்தை ஒழித்துவைத்திருக்கிறார்கள்..
கொத்துக்குண்டுகள் துளைக்காத ஆழத்திற்கு
மனிதத்தின் ஆணிவேர்களை
அனுப்பிவைப்போம்…

Exit mobile version