
சாதி வெறியைத் தூண்டியதற்காக பா.ம.க நிறுவனர் மீது நடவடிக்கை எடுக்காமல் சட்ட ஒழுங்குப் பிரச்சனையைக் காரணம்காட்டி கைது செய்துள்ளது தமிழக அரசு. ஜெயலலிதாவுடன் தேர்தல் உடன்படிக்கை உருவாகுமானால் ராமதாஸ் மீண்டும் அ.இ.அ.தி.மு.க மேடைகளில் முழங்கக்கூடும். அகில இந்திய ஆதிக்க சாதி வன்முறையாளர்களான பாரதீய ஜனதாக் கட்சியைப் போன்றே கருணாநிதியும் மனிதாபிமான அடிப்படையில் ராமதாசை விடுதலை செய்யக் கோரியுள்ளார்.