Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ராமதாஸ் நெல்லையில் : அதிரடிப்படை பாதுகாப்பு

ஆதிக்க சாதி வெறியரும் தமிழ் நாட்டில் சாதி வன்முறையை தூBடி வருபவருமான ராமதாஸ் மனிதகுலத்தின் அவமானச் சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றார். ராமதாஸ் வேறும் ஆதிக்க சாதி வெறியர்களைத் தன்னோடு சேர்த்துக்கொண்டு ஊர் ஊராகக் கூட்டம்போட்டு வருகிறார்.
ராமதாஸ் கூட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதை ஏற்று முதலில் மதுரை உள்பட சில வட மாவட்டங்களில் ராமதாஸ் நுழைய தடை விதிக்கப்பட்டது. பின்னர் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் ராமதாசுக்கு விதிக்கப்பட்ட தடை அகற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து ராமதாஸ் மாவட்டம் தோறும் சென்று அனைத்து சமுதாய பேரியக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். நெல்லை மாவட்டத்தில் இன்று பாளை சகுந்தலா ஓட்டலில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதற்காக பா.ம.க. தலைவர் ராமதாஸ் இன்று அதிகாலையிலேயே ரெயில் மூலம் நெல்லை வந்தார். அவருக்கு பல்வேறு எஸ்.சி., எஸ்.டி. அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Exit mobile version