கோவை கோவையில் ரயில் மறியலில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அதிபர் ராஜபக்சவின் இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னைக்கு புறப்படவுள்ள கோவை எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவிற்கு இலங்கை இனப்படுகொலை ஜனாதிபதியின் வருகையைக் கண்டித்து தமிழ் நாட்டில் அரசியல் கட்சிகளும் சுயாதினக் குழுக்களும் போராட்டங்களை நடத்திவருகின்றன. வழமையான தமிழ் இன அடையாளத்தை முன்வைக்கும் அரசியல் கட்சிகளுக்கு அப்பால் நடைபெற்ற போராட்டங்களுள் சட்டக்கலூரி மாணவர்களின் போராட்டமும் ஒன்று.