Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ராஜபக்ச சர்வாதிகாரம், சரத் பொன்சேகா, பேரினவாதம்

சரத் பொன்சேகாவை மையப்படுத்தி இலங்கை அரசிற்கு எதிரான போராட்டங்கள் இலங்கையில் தீவிரமடைந்துள்ளன. இலங்கை அரசு பதற்றம்டைந்த நிலையில் காணப்படுகின்றது, நேற்று பௌத்த துறவி ஒருவரைக் கொலைசெய்ய முயற்சித்துள்ளது. சிங்கள மக்கள் மத்தியிலுள்ள பேரினவாதக் கட்சிகள் போராட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள முற்பட்டாலும் ராஜபக்ச சர்வாதிகாரத்திற்கு எதிரான முதலாவது நாடுதழுவிய போராட்டம் இது.
அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக கட்சிகள் சரத் பொன்சேகாவை பயன்படுத்திக் கொண்டுள்ளதாக பிரதிப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவிற்கு விதிக்கப்பட்ட தண்டனையை பிழையான வகையில் அர்த்தப்படுத்தி நாட்டு மக்களையும் சர்வதேச சமூகத்தையும் திசை திருப்ப சில சக்திகள் முயன்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சரத் பொன்சேகா விவகாரத்தைப் பயன்படுத்தி சிலர் அரசியல் லாபங்களை ஈட்டிக்கொள்ள முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version