நடத்துக்கின்றோம். ஆனால் எதுவித முன்னேற்றமும் இதுவரை ஏற்படவில்லை. இந்தப் பேச்சுகளில் முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டால் மட்டுமே அரசு கூறும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்போமென இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று கூறப்படும் அதே வேளை, தமிழர்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் என எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.
இலங்கை அதிபர் ராஜபசவை சந்தித்து பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா, இலங்கை கிழக்கு மற்றும் நடக்கு பகுதியில் வாழும் தமிழர்களுக்கு கூடுதல் அரசியல் அதிகாரம் வழங்கப்படும் என்றும், அரசியல் அதிகாரம் வழங்கும் 13வது சட்டத்திருத்த்தை அமல்படுத்துவதாக ராஜபக்ஷே உறுதியளித்துள்ளதாகவும் கிருஷ்ணா கூறினார்.
60 வருடங்களாக இதற்கும் மேலான உறுதிகளைப் பல அரசுகள் வழங்கியுள்ளன. வடக்கிலும் கிழக்கிலும் இராணுவ சர்வாதிகார அரசாட்சியின் மத்தியில் அதிகாரம் குறித்து கிருஷ்ணா பேசுவது கேலிக்குரியது.