Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யேமன் நாட்டில் அமெரிக்கத் தூதரகத்தின் மீது தாக்குதல்

17.09.2008

யேமன் நாட்டில் மிக பலத்த பாதுகாப்புடன் இயங்கும் அமெரிக்க தூதரகத்தின் மீது தீவிரவாதிகள் தொடுத்த ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலில், குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தூதரகக்கட்டிடத்துக்கு வெளியே இரண்டு கார் குண்டுகள் வெடித்தன; அதன் பின்னர் கட்டிடத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது; போலிஸ்காரர்கள் போல உடையணிந்து இந்த தாக்குதலை நடத்தியவர்கள், பாதுகாவலர்களுடன் மோதினர். இறந்தவர்களில் ஆறுபேர் தீவிரவாதிகளும் பாதுகாவலர்களும் அடங்குவர்.

தூதரக அலுவலர்கள் யாரும் காயமடையவில்லை என்று அமெரிக்க அரசுத்துறை நிறுவனம் கூறியது. இஸ்லாமிய ஜிஹாத் என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் குழு ஒன்று இந்த தாக்குதலை தான் நடத்தியதாகக் கூறியது.

BBC

Exit mobile version