இத்தகைய சக்திகளினால் மாணவ சமுதாயம் திசை திருப்பப்படுகின்றது. தமது சுயநல அரசியல்களுக்காகவே மாணவர்களை திசை திருப்பி வருகின்றனர். இவ்வாறானதொரு சம்பவமே பல்கலைக்கழகத்தினுள் இடம்பெற்றுள்ளது.ஆயினும் இறந்து போன உறவுகளை மறக்க முடியாத அதே நேரம் நினைவு கூருவதனை மறுக்கவும் முடியாது. இறந்து போன உறவுகளை வீடுகளில் விளக்கேற்றி நினைவு கூறுவது ஒவ்வொருவரதும் கடமையாகும்’ என யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.
மகிந்த ‘பயங்கரவாதத்தை முடிவிற்குக்குக் கொண்டுவரும்’ போதில் தான் ஒரு லட்சம் உயிர்களைப் பலியெடுத்தார் என்பது முதல்வர் மறந்துவிட்டார் போலும். மகிந்த பலியெடுக்கும் போதெல்லாம் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் உரிமையை முதல்வர் நினைவுபடுத்தி துணைக்குழு ஜனநாயகத்தை நிலைநாட்டுவார் போலிருக்கிறது.