Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ்.பல்கலை பொருளியல் துறை விரிவுரையாளரை பதவி நீக்குமாறு வலியுறுத்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

jaffna_student_004பல்கலைக்கழக மாணவிகளை பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுத்தி வந்ததாகக் கூறப்படும் பொருளியல் துறை விரிவுரையாளர் செ.இளங்குமரனை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.
இன்று காலை யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் இளங்குமரனது கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
பெருமளவான மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தருக்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கலைப்பீடம் சார்பில் அவசர கோரிக்கை என்னும் பெயரில் இம்மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாணவர்களது இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக யாழ்.பல்கலைக்கழக சூழலில் பெருமளவான இராணுவப் புலனாய்வாளர்கள் சூழ்ந்திருந்தனர்

Exit mobile version