Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவக் கோரிக்கை

badullaநேற்றைய தினம் (29/10/2014) அன்று காலை பொழுதில் மாபெரும் மண் சரிவோன்றை பதுளை மாவட்டம் எதிர்கொண்டுள்ளது 2 நிமிடத்தில் 200 ஏக்கர் நிலம் மண் சரிவால் புதையுண்டுவிட்டது. நிலம் மட்டுமல்ல எம் உறவுகளும் புதையுண்டுவிட்டனர் சுமார் 400 பேர் வரை காணாமல் போய்விட்டனர். இந்த கொடூர சம்பவத்தால் பல மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். காலையில் பாடசாலை சென்றுவிட்டு மதியம் வீடு வந்த பிள்ளைகளுக்கு காத்திருந்தது பெரிய இடி ஒன்று தங்களின் நிலம் மண்சரிவால் புதையுண்டுவிட்டது தம் உறவுகள் எங்கே என்ற ஏக்கமும் அவர்களில் குடிகொண்டுவிட்டது. அத்தனை உறவுகளையும் சில நிமிடங்களில் தொலைத்துவிட்டு தவிக்கும் பிள்ளைகளுக்கு உதவ முன்வாருங்கள். தமது அத்தியாவசியத் தேவைகளைக் கூட பூர்த்திசெய்ய முடியாமல் தவிக்கின்ற மக்களுக்கு அப்பொருட்களைக் கொடுத்து உதவ முன்வாருங்கள் நண்பர்களே!

யாழ்பல்கலைக் கழக சமுதாய வழிகாட்டல் மையத்தினரின் இந்த செயற்பாட்டுக்கு தங்களால் இயன்ற உதவிகளை வழங்குங்கள். அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உதவுங்கள். உடனடியாக இந்த உதவியினை செய்யவேண்டி உள்ளதால் யாழ்பல்கலைக் கழக சமுதாய வழிகாட்டல் மையத்தில் பொருட்களையோ பணத்தினையோ கொடுத்து உதவுங்கள் நண்பர்களே!

தொடர்புகளுக்கு- 0776372458
0776336611, 0779201344
சமுதாய வழிகாட்டல் மையம்
யாழ் பல்கலைக் கழகம்

Exit mobile version