Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ். ஊடகவியலாளர்களைக் கூட்டாகக் கைது செய்த இனக்கொலை அரசு

media-freedomயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்குச் சென்ற ஊடகவியலாளர்கள் ஓமந்தைப் பொலிசாரினால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். கஞ்சா கடத்தியதாகப் போலிக் குற்றச்சாட்டில் இவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் இலங்கை அரச படைகள் ஈடுபட்டுவருகின்றன. ஊடகவியலாளர்களைப் போலிக் குற்றச்சாட்டில் தடுத்து வைப்பதன் ஊடாக இலங்கை அரசு அவர்களை மிரட்டியுள்ளது. அதே வேளை தான் மேற்கொள்ளும் போதைப் பொருள் வர்த்தகத்தை ஊடகவியளர்கள் மீது சுமத்த முயற்சிக்கிறது.

ஊடக ஒடுக்குமுறையில் இலங்கைப்பேரினவாத அரசு முதல் தரத்திலுள்ளது. இதுவரை பல ஊடகவியாளர்களை நாட்டைவிட்டு அன்னிய நாடுகளுக்குத் துரத்தியடித்துள்ளது. பலரைக் கொன்று போட்டுள்ளது. இப்போது கூட்டாக ஏழு ஊடகவியலாளர்களைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளது.

Exit mobile version